இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அருமைச் சதைமலர் மொட்டாம்-அதன்
ஆதிக் கதைகளே யெல்லாம் உரிமைத் தமிழிலோர் நூலாய்ப்-பிணிை
ஒட்டும் மருத்துவ வேலாய்ப் பெருமைத் திருமகன் தந்தார்-புகழ்
பெற்றிடும் வெற்றிநூல் தந்தார். அருமை மருத்துவ நூலாம்-இதை ஆணிவேர் மாமரம் என்பேன்.
காடு செழித்திட வேண்டும்-எனில் கார்முகில் பெய்திட வேண்டும். நாடு நலம்பெற வேண்டும்-எனில்
நல்ல தலைவர்கள் வேண்டும். வீடு விளங்கிட வேண்டும்-எனில்
வேல்விழி மங்கையர் வேண்டும். ஏடு புகழ்பெற வேண்டும்-எனில்
இப்படி நூல்தர வேண்டும்.
டாக்டர் எச். செல்வராஜ் அவர்கள் எழுதிய இருதய வியாதிகளும் சிகிச்சையும்' என்னும் மருத்துவ நூலுக்கு 1958-இல் வழங்கிய அணிந்துரை.
22