முன்கோபக் காரனையும் , அக்பர் என்னும்
மொகலாய மன்னனையும் பீர்பால் என்பான் அன்ருடம் சிரிக்கவைத்தான். நாட்டு மக்கள்
அனைவரையும் நகைச்சுவையால் மகிழ வைத்தான். தென்னலி ராமனென்பான் தனது பேச்சுத்
திறத்தாலே அனைவரையும் சிரிக்க வைத்தான். நன்முக நாமெல்லாம் சிரிக்க வேண்டும்.
நம்மைவிட வெளிநாட்டார் சிரிக்கின் ருர்கள்.
அரிப்பூட்டும் கொக்கோகம் எழுதி ேைன
அன்னவனல் , அவனெழுத்தால் , நெஞ்சில் காம நெருப்பூட்ட முடிந்ததன்றிச் சிரிக்க வைக்க நிச்சயமாய் ஒருபோதும் முடிய வில்லை. சிரிப்பூட்டிச் சிந்திக்க வைப்ப தற்குத்
திறன் வேண்டும் , அத்திறமை பலருக் கில்லை. சிரிப்பூட்டும் துணுக்குகளை எழுது தற்கும்
திறன்வேண்டும். அத்திறமை சிலர்க்கே உண்டு.
ஆனந்த விகடனிங்குத் தோன்று முன்பே
ஆயிரத்தெண் ணுாற்றெண்பத் தைந்தில் தோன்றி மானிடர்க்கு நகைச்சுவையை வழங்கி வந்த - மகாவிகட துரதனெனும் இதழைப் போன்று தேனெழுகும் துணுக்குகளை வாரா வாரம்
சிறப்பாகத் தரு தற்கோர் ஏடு வேண்டும். வானம்தான் இருக்கிறது : முகில்தான் இல்லை!
வான்கோழி இருக்கிறது , மயிலைக் காணுேம்!
31