கும்பமும் குரும்பையொடு பம்பரமும் தும்பிவிரு
கொம்புமிவள் முலைக்கஞ்சி வெம்பிநிற்குதே-வயிறு. கோலத்தைக்கண் டாலிலையும் மாலுக்குச் சயனமாகி ஒலமிட்டுப் பாற்கடலை நம்பிநிற்குதே ! - கொம்பனையாள் சிற்றிடைக்கு உம்பரின்மின் ைெளிக்குதே.
பம்புமிவ ளல்குலேச்சர்ப் பப்படங்கண் டேங்குதிவள் விண்ணுலகப் பெண்ணரசியோ!-ஆஹா இவள் விண்ணுலகப் பெண்ணரசியோ!
என்ருெருவர் தஞ்சைநகர் பாப்பு தாசன்
இவ்வாறு லாவணிப்பாட் டெழுதி யுள்ளார். இன்ளுெருவர் இவர்பெயரோ சித்ரம் பிள்ளை.
இக்கவிஞர் இன்பரசத் தெம்மாங் கென்னும் மின்மினிநூல் ஒன்றெழுதிப் பருவப் பெண்ணின்
மேடுமுதல் கூடுவரை வர்ணித் துள்ளார். அன்னவர்க்கிங் கிளேத்தவராய்த் தெரிய வில்லை,
அழுதபா. ரதியென்னும் பாட்டுப் பிள்ளை.
பண்பட்ட ஒவியரின் புதிய நூலோர்
பனிக்கவிதை நூலென்பேன். இந்த நூலை, வெண்பட்டுத் துணியென்பேன். ஊர்ந்து செல்லும்
வெண்ணிலவும் இதையுடுத்த விரும்பு மென்பேன். எண்பட்ட ப்க்கங்கள் தோறும் செய்யுள்
இலக்கியத்தின் முன்னோட்டம் நினைவின் நீட்டம். கண்பட்டால் இதன்மீது பட்ட்டும்; உங்கள்
கைபட்டால் இந்நூலில் படட்டும் இன்றே.
ஒவியக் கவிஞர் அமுதபார்தி அவர்கள் எழுதிய மன்மத ராகங்கள்” என்னும் கவிதை நூலுக்கு 1984-இல் வழங்கிய அணிந்துரை. - . . . . . . . -
- 65.