இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மிகப்பயன் அளிக்கும் செய்யுள்
விளையாடும் இந்த நூலைத் தொகுத்தவர் மூவர்; பாடல்
தொடுத்தவர் முப்பத் தைவர். முகத்தையும், காதல் பேச்சின்
முடிவையும் குறிக்கத் தக்க சுகத்துறைப் பாடல் இந்தத்
தொகுப்பினில் சிறிது மில்லை.
முகப்பினில் ஞாயி றுண்டு;
முழுநீல வான வட்டம் நகர்த்திடும் நிலவு முண்டு;
ஞானக்கண் பாட லுண்டு; நுகத்தடி ஒட்டைக் குள்ளே
நுழைத்திடும் கயிற்றைப் போன்று மகத்துவம் பேசி ஏய்க்கும்
வஞ்சகப் பாட வில்லை.
சுற்றியே வளைத்துப் பேசும்
தொன்மொழி வல்லோர், ஈரம் வற்றியே செத்துப் போன -
மரத்தினை வானம் என்ருர்.' மற்றதை ஒருவர் இங்கே
- மரப்பிணம் என்று கூறிக் .கற்பனைக் குதிரை பூட்டிக் - கவிதைத்தேர் ஒட்டி யுள்ளார்.
78.