பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல தேசிக சுவாமிகள் அவர்கள் என்னை வாழ்த்தி இந்நூலுக்கு அருளார்ந்த அணிந்துரை நல்கியருளியமைக்குப் பெரிதும் நன்றியுடையேன். நூலாக்கத்திற்கு நூல்கள் தந்து உதவிய அனைவர்க்கும் என் நன்றி. இந்நூலை எழுதுவதற்கேற்ற ஆற்றலையும் நீண்ட ஆயுளையும் நல்ல உடல் நிலையுடன் (கண்ணொளி உள்பட) மனவளத்தையும் தந்து என்னைக் காத்துவரும் "பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப்பகங்கொண்டல்” ஏழுமலையானைப் பணிந்து வாழ்த்தி வணங்கி இந்நூலினை ரெ. மு. அவர்களின் அருமைத் தந்தையார் முத்தர் வெ. பெரி. சா. ரெங்கநாதன் செட்டியார் அவர்கட்குக் கீழ்க்கண்டவாறு அன்புப் படையலாக்குகின்றேன். சேந்தணி யார்வீட் டொருபுகழ் பெரும! செம்மையே ஆணியே அன்னான் ஏந்தெழில் முத்துக் கணேசநா யகனை இயற்றமிழ்க் கெனப்படைத் தளித்தாய்; ஆழ்ந்ததின் படைப்புத் திறனை வியந்தேன் ஆக்கிய இச்சிறு நூலைத் தாழ்ந்துநின் றிறைஞ்சிப் படைத்தனன்நினக்கே தகுதிசால் அரங்கநா தய்யா! `வேங்கடம்) இங்ங்ணம் ஏ.டி.13. மனை 3354 ந. சுப்புரெட்டியார். அண்ணாநகர் - சென்னை,40.