பக்கம்:வாழும் வழி.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

121


குழந்தைபோல் பொம்மை செய்தும், இதழ்களைக் களைந்தெறிந்துவிட்டு, அடியிலிருக்கும் காய்ப் பகுதியைக் கம்மலாகவும் பம்பரமாகவும் பயன்படுத்தியும் விளையாடுவது வழக்கம். எனவே, சிறார்களும் நன்கறிந்த பூவரசம் பூவினை எடுத்துக் கொள்வது பொருத்தந்தானே. மேலும் அது பூக்களுக்குள்ளே அரசன் அல்லவா? ஆகவே, அதைப் பற்றித் தெரிந்துகொள்வது, மற்ற பூக்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குப் பெரிதும் துணைபுரியும்.

பூவரசங் கிளையின் கணுச்சந்துகளிலிருந்து நீண்ட காம்புகளுடன் பூக்கள் தோன்றுகின்றன. பூவினைத் தாங்கி நிற்கும் காம்புக்கு ‘விருந்தம்’ (Pedicel) என்று பெயர்கூறுகின்றனர் தாவர நூலார். இதனை மலரின் தாள் என்றும் சொல்லலாம். விருந்தத்தின் நுனியில் ஒரு கிண்ணம் பூவின் மற்ற பகுதிகளை உள்ளடக்கி மூடிக் கொண்டிருக்கும். சிறிய அரும்பாயிருந்தபோது மூடிக் கொண்டிருக்கும் இக் கிண்ணம், பெரிய மொட்டானதும் மேற்புறத்து விரிகிறது. உடனே உள்ளிருக்கும் பாகங்கள் வெளிப்பட்டு வளருகின்றன. இப்பூக்கிண்ணத்தை ‘புஷ்பகேசம்’ (Calyx) என்றழைக்கின்றனர்.

புஷ்ப கோசம் எனப்படும் பூக்கிண்ணம் பூவின் வெளிப்பாகமே. உட்புறத்தே அழகிய மஞ்சள் நிறங் கொண்ட ஐந்து தளங்கள் உண்டு. பூவின் நடுவில் நீளக் கம்பி போன்ற ஒரு பாகம் உள்ளது. அதில், குழாய் போன்றும் ஊசி போன்றுமாக இரண்டு உட்பிரிவுகள் உண்டு. குழாய் போன்றது ஊசி போன்றதைச் சுற்றிக் கொண்டிருக்கும். இந்தக் குழாயின் வெளிப்புறத்தைச் சுற்றியிருக்கிற நூல் போன்ற கம்பிகளின் நுனிகளில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/123&oldid=1111814" இலிருந்து மீள்விக்கப்பட்டது