கவியரசு கண்ணதாசர் 145
சுற்றி இழுப்பது மீதிவழி-அதில்
துணிந்தவன் கண்டது நீதிவழி.’
என்றும்.
'ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன்மேலே
ஓடம்போல் ஆடிடுவோமே வாழ்நாளிலே.'
என்றும்,
'காலம் ஒருநாள் மாறும்-நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணிச் சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்'
என்றும்,
'ஊரெங்கும் தேடினேன்
ஒருவரைக் கண்டேன்-அங்த
ஒருவரிடம் தேடினேன்
உள்ளத்தைக் கண்டேன்
உள்ளமெங்கும் தேடினேன்
உறவினைக் கண்டேன்-அந்த
உறவினிலே மூழ்கினேன்
பிரிவினைக் கண்டேன்’
என்றும் வந்துளள பகுதிகளில் தத்துவக் கருத்துக்கள் பொதிந்துள்ளன.
'நடையழ கோர்புறம்; கற்பனை
நயத்தழ கோர்புறம் சொற்றாெடர்
கடலலை போல்வரும் காட்சியின்
கலையழ கோர்புறம் தமிழ்மொழி
தடையறக் குழைந்திடும் தன்மையின்
தனியழ கோர்புறம்; இத்தகு
படையலைத் தருபவன் பாவளர்
பாவல னாம்கண்ண தாசனே’
என்றபடி, இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவராய்க் கவிஞர் கண்ணதாசர் கவிதை மனம் பூத்து நிற்கிறார். வா–10