இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
viii
மாணாக்கர்கட்கும் பெரியோர்கட்கும் பொதுமக்கட்கும் இந்நூல் பெரிதும் பயன்படக்கூடியது. அருந்தமிழ்ப் புலமை யோடு அறிவியற் புலமையும் வாய்க்கப்பெற்ற பெரும் பேரா சிரியர் க. சுப்பு ரெட்டியார் இத்தகைய பல விழுமிய நூல்களை மேலும் எழுதித் தமிழில் அறிவியல் செல்வத்தை மிகுவிப்ப துடன் பொதுமக்களிடையே அறிவியல் ஆர்வத்தையும் பெருக்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன். தமிழுலகத்திற்கு இந்நூல் அரிய செல்வமாகும்.
சென்னை-600 028 29 – 7 – 1984
செ. அரங்கநாயகம்
“பொதிகை’ ;