பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைச் சுவடுகள் ఏళ్ళ பின் வளர்ச்சியை, வளத்தை வகைகளை, க வாய்ப்பு ஏற்பட்டது. ఢft விகடன் தீபாவளி மலர் மற்றும் சில சிறப்பு கே சிதம்பரநாத முதலியார் எழுதிய கட்டுரைகள் என்ற நல்ல நூல் அப்போதுதான் வெளிவந்தது. ர்ச்சி பதிப்பகம் கவிமணி தேசிகவிநாயகம் மலரும் மாலையும் என்ற தொகுப்பாகக் கொண்டு تا با ت: نه با این تیم بیمار به پدر بیی ఫ్ట్వేషి : - 茨 .چینیم வந்தது. முக்கூடற் பள்ளு நூலையும் வெளியிட்டது. அப்போது டி.கே.சி. தாமிரவர்ணி ஆற்றங்கரையை ஒடடியுளள ப்பேட்டை என்ற ஊரில் வசித்து வந்தார். புதுமைப்பித்தன் ஊரும் அவர் சென்னையில் வசித்தார். সংশে مر لمن : ஒருநாள் பிற்பகலில் நான், தி.க.சி. வேலாயுதம் என்ற நண்பர் ஆக திருநெல்வேலி டவுனில் இருந்து நடந்தோம். திருநெல்வேலி α ما ينمو போய் சிந்து பூந்துறை அடைந்தோம். ஆற்றின் கிழக்குப் பக்கக் கரை மீதுள்ள அழகான ஊர் சிந்து பூந்துறை. அதற்கு நேராக அக்கரையில் இருக்கிறது வண்ணாரப்பேட்டை ஆற்றை ஒட்டிப் பெத்தாச்சி அம்மன் கோயில் இருக்கிறது. ஜங்ஷனிலிருந்து ஆற்றைக் கடந்து அக்கரை போவதற்கு ஒரு பெரிய பாலம் உள்ளது. சுலோசன முதலியார் பாலம். இச் சுற்றுப்புறம் எல்லாம் புதுமைப் பித்தன் கதைகளில் இடம் பெற்றிருக்கின்றன. நாங்கள் ஆற்றில் இறங்கி நடந்தோம். அதிகமான தண்ணீர் இல்லை. நடந்து போக வசதியாகத்தான் இருந்தது. لم تتم நான்கு மணி அளவில் டி.கே.சி. வீட்டை அடைந்தோம். பிற்காலத்தில் எஸ்.வி.எஸ். என்ற எழுத்தாளராகப் பெயர் பெற்ற எஸ். வேங்கடசுப்பிரமணியம் டி.கே.சியின் உதவியாளராகப் பணியாற்றி வந்தார் அப்போது, நாங்கள் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். அடுத்த அறையில் சாய்வு நாற்காலியில் ஓய்வாகச் சாய்ந்திருந்த டி.கே.சியிடம் அவர் எங்களை அழைத்துச் சென்று உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்றார். ரசிகமணியிடமும் நாங்கள் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். சிறுவர்களான எங்களை அவர் அலட்சியமாகப் பார்க்கவில்லை. நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து மலர்ந்த முகத்தோடு வரவேற்றார். அருகில் இருந்த