பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34; வாழ்க்கைச் சுவடுகள் வ.ரா. என்னைக் கூர்ந்து நோக்கினார். 'முன்பே சக்திதாசன் சொல்லியிருக்கிறார். எழுத்தாளன் ஆவதற்காக வீட்டைவிட்டு வெளியேறி நடந்தே புறப்பட்டுவிட்டீர் என்றும் சொன்னார். பேஷ் இப்படித் துணிச்சலாக வீட்டை விட்டு வெளியேறுகிறவர்கள்தாம் தமிழுக்காக ஏதாவது செய்யமுடியும்' என்று கூறிய வரா. நீர் முறையாகத் தமிழ் இலக்கியம் படித்திருக்கிறீரா? என்று கேட்டார்.

  1. - ? - ^ - *

இல்லை என்று சொன்னேன். அது தான் நல்லது முறையாகப் பழந்தமிழ் இலக்கியம் படித்தவர்களால் புதுமையாக எதுவும் செய்யமுடியாது' என்று வரா. குறிப்பிட்டார். உடனே திருலோகம் அவருடன் சண்டை பிடிக்கலானார் 'வரா. நீங்கள் சொல்வது நல்ல யோசனையே இல்லை. எழுத்துத் துறையில் முன்னேற வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிற ஓர் இளைஞனிடம். பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்காதே என்று சொல்வது எப்படி நல்ல ஆலோசனையாக இருக்கமுடியும்? எல்லா இலக்கியங்களையும் படித்துப் புதுமைகள் செய்ய முயல்க என்று சொல்வதுதான் சரியான வழிகாட்டுதலாக இருக்கும் என்று திருலோகம் வலியுறுத்தினார். வரா. அது குறித்து வாதாடவில்லை. 'ஆபீசில் தான் உங்களுக்கு வேலை இல்லையே! என்னோடு வாங்க. சென்னையையும் சென்னை எழுத்தாளர்களையும் பார்த்த மாதிரியும் இருக்கும் என்று திருலோகம் என்னிடம் சொன்னார். நான் இவரை அழைத்துக் கொண்டு போகிறேன். சென்னை மாநகரத்தையும் இவர் பார்க்க வேண்டும் அல்லவா!' என்று ராமநாதனிடமும் கூறினார். அவர் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. ஆகவே, தினம்தோறும் டிராம் வண்டியிலும் பஸ்ஸிலும் நடந்தும் சென்னையின் பல பகுதிகளிலும் சுற்றினோம். நகரத்தையும் நகரில் வசித்த முக்கிய எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ள உதவிய துணைவராய்-வழிகாட்டியாய் விளங்கினார் நண்பர் திருலோக சீதாராம். செளகார்பேட்டை, லாயர் சின்னத்தம்பி முதலி தெருவில் இருந்த 'பிரசண்ட விகடன்' அலுவலகம் சென்று நாரண துரைக்கண்ணனைச் சந்தித்தோம். அவரே ஆனந்த போதினி மாத இதழின் ஆசிரியராகவும் இருந்தார். அதே அலுவலகத்தில் இருந்து 'சித்திரகுப்த' என்ற தெலுங்குப் பத்திரிகையும் வந்துகொண்டிருந்தது. . - இப்பத்திரிகைகளின் வெளியீட்டாளர் நாகவேடு முனிசாமி முதலியார் 'ஆனந்தபோதினி பஞ்சாங்கமும் வெளியிட்டு வந்தார். ஆண்டுதோறும் பத்திரிகைகள் மூலம் கிடைத்த வருமானத்தை விடப் பஞ்சாங்கம் மூலம்