பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்படுத்துபவரே முதுமையிலும் சிறப்பாக வாழ்கின்ருர் என்ற உண்மை உலகுக்குச் சொந்தமானதாகும். இதனை இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். "நம்மைச் சூழ்ந்தே சொர்க்கம் உள்ளது” என்ற கருத்தினை யும் எண்ணிப் பார்க்க வேண்டும். "தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனுமாமே” என்கின்ற வரிகனையும் எண்ணித் தெளிய வேண்டும். தன்னிலையை அறியவும், தன் வலிமையை உணரவும், வரப்பெற்ற வலிமையினை வளமாகப் பயன்படுத்தும் வழி களையும் வாய்ப்புக்களையும் தெளியவும், இளமைக் காலத்தே இனிய நல் துணையாக வரும் விளையாட்டுக்களே உதவு கின்றன என்பதை நாம் அறிவோம். - - விளையாட்டுக்களை ஆ..இடந்தரும் ஆடுகளமே க்தனை பயன்களுக்கும் அடிப்படையானது, ஆதாரமா து என்பதால், ஆடுகளம்பற்றியும் கூடும் வளம் பற்றியும் அடுத்த பகுதியில் தொடர்ந்து காண்போம்.