பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 ஆடுகளமானது, ஆட வரும் ஆட்டக்காரர்களையும், ஆட விரும்பும் மக்களையும் வீரர்களாகவும், நல்ல திறமை புள்ள மனிதர்களாகவும் ஆக்கி, உருவாக்கித் தருகின்ற ஒரு சிறந்த பயிற்சிக் கூடம் ஆகும். சிறந்த உணவினை சமைக்கப் பயன்படும் சமையற்கூடத் தைப் போல, சிறந்த இளைஞர்களை சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் சமைத்துக் தருகின்ற, தீரமிக்க சமுதாயத்தை விளைத் துத் தருகின்ற வளம் சேர்க்கும் சமையற் கூடம் ஆகும். "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது என்பார். படிப்பறிவும் வேண்டும், அனுவபங்கள் மிகுந்த பட்டறிவும் வேண்டும் என்பதாக, அழகழகாக அடுக்கடுக்காக அனுபவங்களே அள்ளிச் சொரிகின்ற அருமை மிகு கல்விக்கூடம் ஆகவும் ஆடுகளம் திகழ்கிறது. - - உலகமானது பல்வேறு விதமான மனுேபாவங்களேயும், பலவிதமான கருத்து வேற்றுமைகளையும், அசைவுகளே யும் கொண்டிருக்கும் மக்களேக் கொண்டதாகும் அவர்களுக்குள் ஆயிரமாயிரம் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், கருத்து ஒருமைப்பாட்டுடன், ஒரே நோக்கமான விளயாட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஆடவைக்கிறது, அத்துடன் நில்லாமல், அவர்களிடம் கலந்துரையாடவும், கனிவுடன் பேசி மகிழவும் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் சக்திப்பு (Junction) இடமாகவும் ஆடுகளம் விளங்குகிறது. வாதி பிரதிவாதிகள் வழக்காடுகின்றனர். அதனைத் தீர்த்து நடுநிலைமையுடன் தீர்ப்பளிக்க நீதிபதி அமர்ந்திருக் கின்ருர், நியாயம் இறுதியில் வெல்ல அவரும் அவரைச் சார்ந்த அதிகாரிகளும் உழைக்கின்றனர். அதுபோலவே,