பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வாழ்க்கையின் வழிகள்! வாழ்க்கையை சிறப்பாக வாழ வழி என்ன என்று கேட்டால், நமக்குக் கிடைக்கும் பதில் மேலே நட என்பதுதான். ஏனென்ருல், எதிர்காலம் என்பது நமக்கெல்லாம் ஒர் இருளடைந்த மண்டபமாகத் தான் தெரிகிறது. தைரியத் துடன் தடுமாறி நடக்க முயல்கிருேம். எதிரே என்ன இருக்கும், என்னென்ன கிடக்கும், எப்படி தடுக்கும் என்றெல்லாம் மனக்கண்ணுல் பார்க்கலாமே தவிர, வேறு என்ன செய்ய முடியும்? உறும் வழியில் உண்மை என்னவென்று காலில் தட்டுப்படும்பொழுதும், தலையில் குட்டுப்படும்பொழுதும் தான் உணர முடியும். "தானே ஒன்றை உணரும்பொழுதுதான் ஒருவனுக்குத் தெளிவு ஏற்படுகிறது. வீணே முயன்ருலும், எந்த மனித னுக்கும் எப்படி வாழ்வதென்பதை யாராலும் கற்றுக் கொடுத்துவிட முடியாது.”