பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வாழ்க்கைப் புயல் விட்டு மறுவேலை பார்க்கிறேன். என்கூட இருந்த ஆசாமி, இப்ப வெளியே போயிருக்கிறானே, அவனிடம்கூடச் சொல்லியனுப்பி இருக்கிறேன்-டே! கண்ணா! ஜாக்கிரதை யாகக் கவனிச்சிக்கிட்டே இரு, அந்த ஆசாமியை, வெளியே வந்ததும் அவனைத் தீர்த்துப்போடணும், என்று உஷார் படுத்தித்தான் அணுப்பி இருக்கிறேன். அப்படிப்பட்ட திருட்டு ஆசாமி-கோயில் சொத்தைக் கொள்ளை அடிச்ச வன் -- முழுப்பா சுருட்டியாச்சே,வைத்திஸ்வமன். அவன் வெளியிலே இருக்கறதாலேயே, அவன் யோக்யன்னு எண்ணி டாதே. எனக்கு இந்தத் திருட்டுத் தொழிலைப் பழக்கமாக் கியதே, அவன்தான். அதனாலே அவன் இலாபம் அடைந்து பெரிய மனுஷ்யனாயிட்டான்; நான் ஜெயிலிலே இருக்கிறேன். தம்பி! சொத்து, நகை, பணம், காசு இதெல்லாம் பேச ஆரம்பிச்சா தெரியும், ஜெயிலுக்கு வெளியே எவ்வளவோ கள்ளனுங்க. இருக்கிற சூட்சமம்" என்று அந்தக் கைதி கூறினான். "கேட்டுக்கிட்டய 63 அப்படிப்பட்ட வைத்தீஸ் வானை,வேஷத்தைப் பார்த்துவிட்டுப் பெரிய மனுஷன்னு சொல்லறே, விவரம் தெரிந்துகொள்ளாமே. மாயவாத்துக்கு அடிக்கடி வருவான், இந்த வைத்தீஸ்வான். அங்கேதான் எனக்கு இவன் யோக்யதை தெரிந்தது. ஒரு ஓட்டலிலே ரூம் எடுத்துக்கொண்டு அதிலே இருந்தான். நான் அந்த சமயத்திலே, ஒட்டல் பக்கம் போய்வருகிற வழக்கம் அங்கே கொஞ்சம் சௌகரியமாகச் சாமான்கள் கிடைத்து வந்தது. ஒருநாள் இவன் ரூமுக்குள்ளே நுழைஞ்சேன்- இவன் கீழே குளிக்கப் போயிருந்தான் - உள்ளே போய்ப் பார்க்கிறேன் - ஒரு பெட்டி நிறைய அபின் அடைச்சி வைச்சிருக்கு, அபினியைப் பெட்டியிலேபோட்டு அடைச்சி