பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வீன் 53 கணக்கு எண்ணுவது, குறித்துக்கொள்வது, வேலையைச் சரியாகச் செய்யும்படி பார்ப்பது, இவ்வளவுதானே, இதிலே என்ன கஷ்டம் என்று கேட்கலாம். நானும் அப்படி எண் ணிக்கொண்டுதான் வேலைக்குச் சென்றேன். அங்கே வேலை செய்ய ஆரம்பித்த பிறகுதான், என் வேதனையான வாழ்வு எனக்குப் புலப்பட்டது கட்டிட மேஸ்திரி சொன்னான், இந்தக் காலி நிலம் வாங்கினதிலே, செட்டியார், சரியான அடி அடித்தார்; திரு - ளிடம் கொடுத்தால்கூட,விலை,மூன்றுமடங்கு அதிக மாகத் தருவான் என்று. நகரசபைக்குத் தலைவராக இருப்பதால், அவநூல், மிக மலிவான இந்த நிலத்தைத் தட்டிக்கொள்ள முடிந்தது என் றான், செங்கல் கொண்டுவந்தவன். இரும்புக் கர்டர்கள், லாரிகளிலே வந்து இறங்கிய போது, "என்ன பஞ்ச காலமாக இருந்தாலும், கிடைக்கிற வர்களுக்குச் சாமான் கிடைத்துக்கொண்டுதான் இருக்கி றது" என்றான்,லாரி டிரைவர். "எந்தக் கம்பெனி?" என்று கேட்டேன், "கம்பெனியாவது மண்ணாவது; எல்லாம் மில் டெரியில் ஏலத்தில் எடுத்தது" என்றான். இப்படி, அங்கே வருகிறவர்களெல்லாம், 'மாதூர் பூமி' யால் வைடூரியம் செட்டியார் அடைகிற இலாபக் கொள்ளை யையே, சொல்லிக்கொண்டிருந்தார்கள். மற்றத் தொழிலா ளர்கள் இந்தப் பேச்சைக் கேட்டு, திர்ஷ்டம்ட என்று கூறிவிட்டு முடியவில்லை. வேவயைக் கவனித்தனர்; என்னால் பலவிதமான எண்ணங்கள்! எப்படி எப்படி இலாபம் சம்பாதிக்கிறார், ஊரிலேயும் பெரிய மனி தராக இருக்கிறார், இப்படிப் பணம் திரட்டும் இவருக்குக்