பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


பேர்னம் சர்க்கஸ் கம்பெனியையும் சிக்கனமான முறையிலேயே நடத்தி வந்தார். மிருகங்களை வைத்திருப்பவர்களையும், சர்க்கஸ் வேலை செய்பவர்களையும் கூட்டி, கூலிக்கு அமர்த்திக்கொண்டு கம்பெனி நடத்தி வந்தார். அவர் இப்படிச் சிக்கனமாகத் தொழில் நடத்தியதின் மூலம் வெகு விரைவிலேயே பெரிய பணக்காரர் ஆனார், அவர் தம்முடைய எழுபதாவது வயதில் சொந்தத்திலேயே மிருகங்களை வாங்கி, சம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தி “பேர்னம் அண்டு பைலி சர்க்கஸ் கம்பெனி” ஒன்றை ஏற்படுத்தினார்.

ஆரம்பத்தில், பேர்னம் தொழிலில் நஷ்டமடைந்தாலும் பிற்காலத்தில் நஷ்டம் என்ற பேச்சே அவர் அகராதியில் இல்லாமல் செய்துகொண்டார். அவருக்கு இந்த சாமர்த்தியம் எற்பட்டதே "எப்படி பணம் சம்பாதிப்பது?” என்ற புத்தகம் எழுதிய பிறகு தான் என்று சொல்ல வேண்டும்.