பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


கணவர் மனம் என்ன பாடு படுகின்றதோ அங்கு என்றெல்லாம் பல எண்ணிக் கவன்றாள். இதனை,

 அருந்து மெல்லடகு யாரிடம் அருந்துமோ என்றழுங்கும்
விருந்து கண்டபோது என்னுறு மோஎன விம்மும்
மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட கேரய்க்கென
                                                          மயங்கும்
இருந்த மாநிலம் செல்லரித் திடவும் ஆண் டெழாதாள்"

என்னும் கம்பரின் உருக்கமான பாடலால் அறிய லாம். தென்னாட்டுப் பண்பாட்டில் ஊறி வளர்ந்து வாழ்ந்த கம்பர், சீதையின் வாயிலாக விருந்தோம் பியதை வற்புறுத்தியதில் வியப்பொன்றும் இல்லை யன்றோ?

பெண்டிர் திறமை

கண்ணகியும், சீதையும் விருந்தோம்பாது போயினும் தம்மால் முடியாது போனமைக்கு வருந்தியாவது இருப்பது மிகவும் போற்றிப் புகழ் தற்குரியதாகும். சிறந்த பெண்களின் இலக்கணம் இதுவே. தாங்கள் எவ்வளவு எளிய நிலையில் இருப்பினும், தம்மை நாடி வந்தவர்களை உதறித் தள்ளாமல் மகிழ்விக்கும் மனப்பான்மையும், திறமையும் பெண்டிர்க்கு இருத்தல் இன்றியமையாததாகும். வீட்டில் ஒன்றும் இல்லை. உணவு தண்ணீரே! அதுவும் ஒருநாளைக்கு ஒரு குடத்திற்குமேல் மறு குடத்திற்கு வழியில்லை.(1950-ஆம் ஆண்டு இந் நிலையில்தானே உளது.) இந் நெருக்கடியான நேரத்தில் சுற்றத்தினர் வந்து சூழ்ந்துவிட்டனர். சுற்றத்தார் என்றால் ஒருவரல்லர்; இருவரல்லர்; கடல் நீரும் போதாத அளவில் பலர் கூடிவிட்ட