இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அனைத்துப் பாடங்களிலும் தமிழில் போதிக்குங்கால், தமிழில் அறிவியல் நூல்கள் பெருகும். இந்தக் கொள்கையிலே நாங்கள் ஒன்றுபட்டவர்கள். இ த னை ச் சாதிக்க அரசின் துணை தேவைப்படுகிறது.
அடிகளாரும், நானும் அத்துறையில் ஒன்றுபட இறையருள் கூட்டுவிக்குமாக !
நூலை விரிவாகப் படிக்கப் படிக்க எனது அறிவு விரிவடைகிறது. ஒவ்வொரு தமிழரும் எனது நிலையை அடைய இந்நூல் பயன்படுமாக !
கலைவாணி புத்தகாலயத்தின் உரிமையாளர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நன்றாகப் பதிப்பித்துள்ளார்.
அடிகளாருக்கு என் மனமுவந்த நன்றி. பதிப்பகத்தாருக்கு என் பாராட்டு.
சென்னை-18
ம. பொ. சிவஞானம்
28-12–92.