பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சலவைத் தொழிலாளி

33


சில சமயம், நம்முடைய உருப்படிகளில் சிலவற்றைக் கிழித்துக்கொண்டு வந்துவிடுவான்.

அப்பொழுது, “இந்த உருப்படிகளைத் தொலைத்து விட்டுக்கூட வந்திருக்கலாமே, இந்த மாதிரி சித்திரவதை செய்வதற்கு?” என்று தோன்றும்.

காலர், கை முதலியவைகளெல்லாம், சட்டையிலிருந்து விடைபெற்றுக்கொள்ளும் பரிதாபகரமான காட்சியைக் காண நேர்ந்தால், யாருக்குத்தாம் வயிற்றெரிச்சல் வராது? இந்த மாதிரிச் சட்டைகளையெல்லாம் கோட்டுப் போடும்போதுதான் உபயோகப்படுத்தலாமேயன்றி, வேறு சாதாரணமாக உபயோகப்படுத்த முடிகிறதா?

என்ன செய்வது? இப்படியெல்லாம் அவன் செய்தாலும், அவனுடைய தொடர்பை அறுத்துவிட முடிகிறதா? அதுதானே முடியவில்லை. காரணம் வேறொருவன் வந்தால் அவன் உருப்படிகளை, எண்ணிக்கையாவது குறையாமல் கொண்டுவருவானோ என்னவோ? அப்படியே கொண்டு வருவதாயிருந்தாலும், இனிமேல் அவன் விலாசம் போட வேண்டாமா!