பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

நண்பர் வள்ளியப்பாவின் முதல் புத்தகம் 'மலரும் உள்ளம். இது குழந்தைகளுக்காக வெளியிடப்பட்டது: இதற்குத் தமிழ்நாட்டில் எங்கும் நல்ல ஆதரவும், வரவேற்பும் இருந்து வருகின்றது. "வாழ்க்கை விநோதம்' இவரது இரண்டாவது புத்தகம்.

சாதாரண வாழ்வில் கானும் விநோதங்களைத்தான், ஆசிரியர் இதில் நகைச்சுவை ததும்பச் சித்திரித்திருக்கிறார். இயற்கையாகவே நகைச்சுவை மிளிரப் பேசித் தம் நண்பர்களை மகிழ்விக்கும் இவர், இப்புத்தகத்தின் மூலமாகத் தமிழ் நாட்டு நண்பர்கள் அனை வரையுமே மகிழ்விக்க முன்வந்துள்ளார்.

இதை வெளியிட அனுமதி தந்த ஆசிரியர் அவர்கட்கும் நல்ல ஆதர வளித்துவரும் அன்பர்கட்கும் எங்கள் நன்றி.


பழனியப்பா சகோதரர்கள்