பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 அளித்து அடிக்கடி தூண்டவும் ஆரம்பித்துவிட்டது.

நாள் ஆக ஆக, அந்த ஆசையின் சீடனாகிவிட்டேன் ! அப்புறம் நான் எழுதிய விஷயங்கள்தான் இதில் காட்சி அளிக்கின்றன.

‘சக்தி’யிலும், ‘தொழிலாளர் உலக’த்திலும், 1940-லிருந்து (யுத்த காலத்தில்) எழுதப்பட்டவைகளே இதில் பாதியை நிரப்புகின்றன, மற்றவை யெல்லாம் இதுவரை அச்சு வாகனம் ஏறாதவை.

இப்புத்தகம், பொழுது போக்குக்கு உபயோகமாகும் என்று நம்புகிறேன்.

இதை வெளியிட முன்வந்த நண்பர் செ. மெ. பழனியப்ப செட்டியாரவர்களுக்கு எனது நன்றி.

அழ. வள்ளியப்பா

இராயவரம்

26–7–’45