பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளைக்காரரும்
வெள்ளிக்கிழமையும்


“இன்றைக்கு என்ன, திங்கட்கிழமையா? அடடா, 7 1/2 முதல் 9 வரை ராகுகாலம் அல்லவா? இந்த நேரத்திலே இந்த நல்ல காரியத்தை ஆரம்பிக்கப்படாது” என்று நம் நாட்டில் எத்தனையோ பேர் சொல்லுகிறார்கள் ராகு காலத்தைப் போலவே, எமகண்டம், கரிநாள் முதலியவைகளெல்லாம் அநேகருக்குப் பிடிப்பதில்லை.

இப்படிப்பட்டவர்களைப்பற்றிக் கூறும்பொழுது, “செச்சே, இவர்களெல்லாம் என்ன, இப்படிப் பத்தாம் பசலிகளாக இருக்கிறார்களே! மேல்நாட்டிலெல்லாம்.இது போலவா நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிரறார்கள்? அதனால்தான் அவர்கள் இவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறார்கள்” என்று சிலர் சொல்வதுண்டு.

ஆனால், அந்த மேல்நாடுகளிலுள்ள சில நம்பிக்கைகளைப்பற்றிக் கேள்விப்படும்போது, “அடடா, இந்த வெள்ளைக்காரர்களுக்கு நாம் எவ்வளவோ தேவலையே!” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!