பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளைக்காரரும் வெள்ளிக்கிழமையும்

75


அவர்களில் அநேகருக்கு வெள்ளிக்கிழமை என்றால் பிடிக்கவே பிடிக்காது. வெள்ளிக்கிழமையில் எந்தக் காரியத்தையுமே ஆரம்பிக்க மாட்டார்கள். திருடன்கூட வெள்ளிக்கிழமையன்று திருடமாட்டானாம்.

“டேய், நாளைக்கு கோர்ட்டிலே உன்னை விசாரிக்கப் போகிறார்கள்” என்று போலிஸ் அதிகாரி ஒரு திருடனிடம் கூறினால், “ஐயையோ! வேண்டாமைய்யா, இறைக்கே விசாரிக்கட்டும். அல்லது நாளை மறுநாள் விசாரிக்கட்டும். நாளைக்கு வெள்ளிக்கிழமை. வேண்டவே வேண்டாமய்யா” என்று கெஞ்சுவானாம். ஏன் தெரியுமா?

வெள்ளிக்கிழமை வரும் குற்றவாளிகளுக்கு, தண்டனை அநேகமாக இரண்டு மடங்குதான் இருக்குமாம். மூன்றுமாதம் சிறைவாசம் கொடுக்க வேண்டிய குற்றத் துக்கு ஆறுமாதம் கொடுத்துவிடுவார்களாம், அநேக நீதிபதிகள்.

வெள்ளிக்கிழமை கல்யாணம் செய்துகொள்வது கூடாதாம்! அப்படிச் செய்துகொண்டால், கணவனோ அல்லது மனைவியோ சீக்கிரத்தில் இறந்துவிடுவார்களாம் அல்லது கணவனுக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு விவாகரத்துச் செய்துகொள்ள வேண்டிய நிலை வந்துவிடுமாம்!

ஒருவருககு இரவில் தூக்கம் வரவில்லையாம். உடனே தம் மனைவியைக் கூப்பிட்டு, “நீ படுக்கையை என்று திருப்பிப் போட்டாய்? வெள்ளிக்கிழமைதானே! உண்மையைச் சொல்!” என்றாராம்.

“இல்லையே!” என்றாளாம் அவர் மனைவி.