பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வாழ்க்கை விநோதம்


“இல்லவே இல்லை; பொய் சொல்லுகிறாய். நீ வெள்ளிக்கிழமை படுக்கையைத் திருப்பிப் போட்டதால் தான் துக்கமே வரவில்லை” என்றாராம் அவர்!

ஒருவர் மற்ருெருவருக்குக் கடிதம் எழுதுகிறார். அது மிகவும் இரகசியமான கடிதம். அதைப் படித்து முடித்ததும், அதை நெருப்பில் கொளுத்தப் போகிறார், அவர். ஆணால், அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தால்,அதை நிச்சயம் கொளுத்தமாட்டார். மறுநாள்தான் கொளுத்துவார்.

ஏன் தெரியுமா? வெள்ளிக்கிழமை கொளுத்தினால் கடிதம் எழுதியவருக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமாம்.

வெள்ளிக்கிழமை இரவு ஒரு கனவு கண்டால் அது கட்டாயம் பலித்துவிடுமாம் பரீட்சையில் தோற்றுப் போவதாகக் கண்டாலும் சரி, கிரிக்கெட் ஆட்டத்தில் ஜெயிப்பது போலக் கண்டாலும் சரி, கழுத்தை யாராவது திருகுவது போலத் தோன்றினாலும் சரி-அது சீக்கிரத்தில் பலித்துவிடுமாம்!

இவை மட்டுமா? வெள்ளிக்கிழமை நகம் வெட்டுவது கூடாதாம். அப்படி வெட்டினால், அது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடுமாம்! மிகவும் கஷ்டப்படுகிறவனை, ‘இவன் வெள்ளிக்கிழமை பிறந்திருக்கிறான் போலிருக்கிறது’ என்றும் சிலர் சொல்வதுண்டாம்!

இந்த வெள்ளிக்கிழமையைப் போலவே அவர்களுக்கு மிகவும் வேண்டாத எண் 13.

“டேய், மூன்று பேராகச் சேர்ந்து போகாதீர்கள். காரியம் குட்டிச்சுவராய்ப் போய்விடும்” என்று நம்மில் சிலர் சொல்வதில்லையா? அது போலவே, 13-ஆம் தேதி,