பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 அப்படிப் பயன்பட்டது எனக்கும எண்ணற்ற ஆசிரியர் களுக்கும். அப்படிப் பயன்படுகிறது எனக்கு. அப்படியே, பயன்படட்டும் எல்லோர்க்கும் என்பது குறையாகாது. 14 வாழலாம்; நல்ல வண்ணம் வாழலாம்: மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; எப்போது? இப்போதே; இப் பிறவியிலேயே. மக்கள் இனம் இதை உணரவில்லை; வாழும் முறையை கற்றுக்கொள்ளவில்லை. எது வாழும் முறை? முல்லை, முல்லையாக மணம் பரப்புவது அதன் வாழ்வு முறை: மல்லிகை மல்லியாக மலர்ந்து மகிழ்விப்பது அதற்குரிய வாழ்க்கை முறை. செண்பகம் செண்பமாகவே காட்சியளிக்க வேண்டும்; அதற்குரிய மணம் விசவேண்டும். அதேபோல் மனிதன், முழு மனிதத்தன்மை செறிய வாழவேண்டும். மனிதத் தன்மையின் அடையாளங்கள் LIGU. தன்னைக் கட்டுதல், மனிதனுக்கே உரிய தனிப் பொறுப்பு. தன்னடக்கத்தில் வளர்பவனுடைய ஆற்றல் அளவிட (Մւգ.աո Զցմ. மனிதனைத் தவிர, பிற உயிர் இனங்களுக்கு, தன்னடக் கக்கலை வாராது. எனவே, அரிமா அன்றிருந்தவாறே இன்றும் இருக்கிறது. நாளேயும் இருக்கும். ஆவின் நிலை தான் என்னே? தோற்றக் கால நிலையே, இந்த இருபதாம் நூற்றுண்டிலும், ఇJr.-7