பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை மகாகவி பாரதியார் நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை எய்தவும் பாடு பட்டவர். "பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் turിൿചെഖേജ്മെ" என்று கனிவோடு கூறியவர். அவர்தம் பாடல்களால் சாதாரண மக்களின் வாழ்க்கை நாளும் உயர்வு பெற்று வருவதைக் காண் கிருேம். இதையே வாழ்விக்க வந்த பாரதி என்னும் தலைப்பில் அற்புதமான கட்டுரை வடிவத்தில் தமிழ்ச் சான்ருேரும் அறிஞருமாகிய உயர்திரு நெ. து. சுந்தர வடிவேலு அவர்கள், சத்ய கங்கை’ பத்திரிகையில் தொடர் கட்டுரையாக எழுதி வந்தார்கள். அதனைப் புத்தக வடிவில் வானதி பதிப்பகத்தில் வெளியிட அனுமதியளித்த உயர்திரு நெ. து. சுந்தரவடிவேலு அவர்களுக்கும் இந்த நூல் தோன்றக் காரணமான சத்திய கங்கை பத்திரிகை ஆசிரியர் திரு. பகீரதன் அவர்களுக்கும் தமிழ் வாசகர்களுக்கும் நன்றி. ஏ. திருநாவுக்கரசு வானதி பதிப்பகம்