பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 வாழ்வியல் நெறிகள்

ஒட்டக்கூத்தர் அப்பர் பெருமானைப் போல் நீண்ட காள் வாழ்ந்தவர். சொற்சுவையும் பொருட்சுவையும் கிரம்பிய பனுவல்களை ஈந்தவர். தக்கயாகப் பரணி யென்னும் சமயப் பரணி பாடிப் புகழ் பெற்றவர். இவர் தொடங்கிவைத்த இப்பரணிப் போக்கே அஞ்ஞவதைப் பரணி, பாசவதைப் பரணி,மோகவதைப் பரணி முதலிய பரணிகளுக்கு வழிகாட்டியாயிற்று. இவர் புலவரில் புலவர், கவிஞரில் கவிஞர். இவர் இயற்றிய தக்கயாகப் பரணி இவர் பெருமைக்குச் சான்றாக என்றும் விளங்கும். --