144 வாழ்வியல் நெறிகள்
ஆன்மா கடவுளையடைய முடியாமல் தடுக்கும் கான், எனது என்னும் மாயை அறுந்து, உயிர் பேரின்பம் அடைய இத்தொண்டு வழிவகுக்கும்.
சமுதாயத்தை விட்டு ஒதுங்கி ஒடும் ஒதுங்கல் கொள்கையைச் சைவம் வலியுறுத்தவில்லை. மாறாகச் சமூகத் தொண்டைப் பெரிதும் வலியுறுத்திக் கூறுகின்றது.
விருந்தோம்பல்
விருந்தினர்களைப் பேணுவதில் நமது காடு பெயர் பெற்றது. விருந்து பேணும் சிறப்பொழுக்கத் தைப் பற்றித் திருவள்ளுவர் தனி அதிகாரத்தையே வகுத்திருக்கிறார் என்பதன் மூலம் இவ்ஒழுக்கம் கமது காட்டில் எத்துணை மேன்மையாகக் கருதப்பட்டது என்று தெளிவாகும்.
சைவ ஒழுக்கத்தில் விருந்தோம்பல் ஓர் இன்றி யமையாத அங்கமாகக் கருதப்பட்டது. சைவராயினார் பிறவிப் பயன் எய்த வேண்டுமானால் அவர்கள் இரண்டு செயல்களை மேற்கொள்ள வேண்டும். முதலாவது மதிதுடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல். க ண் ணி னா ல் அவர் கல்விழாப் பொலிவு காண்டல் இரண்டாவது. சேக்கிழார் பெருமான் இவற்றை அறுதியிட்டுக் கூறு கிறார். இதற்கு அவர் மூலமாகக் கொண்டது,
ஒட்டிட்ட பண்பின் உருத்திரப்பல் கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் என்னும் சம்பந்தரது திருமயிலைப் பாசுரமாகும். பெரியபுராணத்துள் Լ15Ն) திருத்தொண்டர்களது செயற்கருஞ் செயல்கள் பேசப்பட்டுள்ளன. அவற்றுள்,