இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர். சி. பாலசுப்பிரமணியன் 211
- இரைத்துத் திரைத்து நுரைத்து * மூதண்ட வேதண்ட கோதண்ட மோம’
- வாளிகள் கூளிகள் காளிகள் நாளியி லாளியென'46
- கொடிமுல்லை விடுகொல்லைக் கடிமுல்லை
வெள்ளைப் பள்ளை’
காமர் வேள் 48
-முதலாக எண்ணிறந்த எடுத்துக் காட்டுகளைக்
காட்டலாம்.
முரண் தொடை அமைத்துப் பாடுவதிலும், இவ்வாசிரியர் வல்லவராய்த் திகழ்கிறார்.
‘'வெண் புயலும் கரும்புயலும்’
“செங்கயல் கிடக்கும் கருங்கட் பசுந்தோகை’ 50 “சிறுமதிடும் பெருமதியின் உகப்படரும் காலம்'51
சிற்றம் பலம்கண்டு பேரம் பலத்தைச் செய்யாதவரே :
கருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணிற்றன்’ 58
ஆகிய பல தொடர்களில், முரண் தொடையைச் சிறப்பாக அமைத்துப் பாடியிருக்கிறார்.
மோனை, எதுகை, முரண் தொடைகளை முயன்று அமைத்தால், அவ்விலக்கியக் கலை சிறப்புறாது. அத்தொடைகள் ஆசிரியரின் முயற்சியின்றியே அவ்விடங்களில் அமையவேண்டும். ‘முயற்சி இன்றித் தக்க அளவில் அமையும் எதுகையும் மோனையும் வீணானவை அல்ல; அவை அடிகளை நினைவூட்ட உதவுவதோடு, ஒருவகைக் கவர்ச்சியும் தந்து,