ήθ வாழ்வியல் நெறிகள்
நெடுங்ா ஒண்மணி கிழத்திய கடுங்ாள்
அதிரல் பூத்த ஆடுகொடிப் படா அர்
சிதர்விரல் அசைவளிக் கசைவங் தாங்குத்
துகில்முடித்துப் போர்த்த துாங்கல் ஓங்குகடைப்
பெருமூதாளர் ஏமம் சூழல் என்ற முல்லைப் பகுதிவழி உணர்த்துகின்றார் ஆசிரியர்.
நாழிகைக் கணக்கர்
இவ்வாறு மன்னனின் தனி இருக்கையில் குறுக் தொடி மகளிரும், பெருமூதாளரும் மட்டுமின்றி எடுத்த காரியம் இனிதே நிறைவுற பொழுதினைக் கண்டு கூறும் மெய்யறிவுடையவர்களும் ஆங்கு இருந்தமையை,
பொழுதளங் தறியும் பொய்யா மாக்கள் தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி எறிநீர் வையகம் வெல் இய செல்வோய்கின் குறுநீர்க் கன்னல் இனைத்தென் றிசைப்ப9
என்று முல்லைப் பகுதி உணர்த்துகின்றது.
யவனரும் மிலேச்சரும்
அரசனின் இருக்கையில் உள் காட்டு மெய்க்காப் பாளர் மட்டுமின்றி அயல்நாட்டுக் காப்பாளர்களும் இருந்தனர் என்பதை முல்லைப்பாட்டு உணர்த்தி கிற்கிறது. அரசன் பள்ளியறையில் அகப்பணி செய்தற்கு அயல்காட்டுக் காப்பாளர் அமைக் திருந்தனர். இவ் அயல் காட்டுக் காப்பாளர்களில்,