28 ⃞
விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு
இழுத்துக் கொண்டு சிறைக்குச் சென்றார்கள்.
இலவாஸ்யே சோதனைகள் நடத்திய விஞ்ஞானக் கூடத்திலே, கொடுங்கோலன் ஆட்கள் கொள்ளைக்காரர்களைப் போலப் புகுந்தார்கள்.
அங்கிருந்த அறிவியல் ஆய்வுக் கருவிகளை எல்லாம், லவாஸ்யே மீதிருந்த கோபத்தை எதிரொலித்து மனம் போனவாறு தூக்கித் தூக்கிப் போட்டு உடைத்தார்கள் சோதனை கூடத்தையே சூறையாடி விட்டார்கள். .
அறிவுச் சிங்கம் நடமாடிய அறிவியல் கூடத்தை, அராஜக நாய்கள் புகுந்து, கருவிகளையும் - அவர் குறித்து வைத்திருந்த அறிவியல் குறிப்புகளையும் அழித்து நாசமாக்கி விட்டன!
உண்மை அறிவை உலகிலே நடமாடவிட உழைத்துழைத்து உருக்குலைந்த உத்தமனின் சாதனைச் சாலை, போலிப் புலமையாளன் ஏவிய ஆட்களால் பொடி பொடியாகிக் கிடந்தன.
விஞ்ஞான உலகத்தின் விடி வெள்ளியாகத் திகழ்ந்த லவாஸ்யேவின் துணைவி மாரி ஏதும் பேச முடியா ஊமை நிலையிலே கண்ணிர் விட்டபடியே நின்றாள்? கதறினாள் அழுதாள்!
கணவனைக் கொடுமைக்காரர்கள் விலங்கிட்டுப் பரபர வென்று இழுத்துச் சென்றதை நினைத்து நினைத்துப் பரிதவித்தாள் ஆறாத் துயருற்றாள்!
மாராவின் ஆட்கள் சோதனைக் கூடத்தை மட்டுமா அழித்தார்கள்? மாரி, குடியிருந்த வீட்டின் பகுதிகளை எல்லாம் சீர்குலைத்தார்கள்.