இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விடிவெள்ளி இரண்டாம் பாகம்-ஒளியின் சிரிப்பு 1. இருளில் சென்ற இருவர் எங்கும் இருள்தான் நிலைத்து நின்றது. குளிர்காற்று ஊசலிட்டுக் கொண்டிருந்தது. இருட்டைக் கண்டு பயந்தும், குளினால் பாதிக்கப் பட்டும் நடுங்குவேைபால அநேக வெள்ளிகள் துடித்தன. வானிைே. வானம் முழுவதும் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன. மதிப்புத் தெரியாமல் எவனோ வாரி இறைத்து விட்ட வைர் பணிகள் போல, சாத்தன் கணபதி முன் சென்றான். இளம்வழுதி அவனுக்குப் பின்னால் நடந்தான். இருவரும் அடி எடுத்து வைத்தார்கள். இவன் என்னை எங்கே அழைத்துப் போகிறானோ? மங்கையர்க்கரசி குறிப்பிட்ட மனிதர் எப்படிப் பட்டவரோ? என்ன உதவி செய்வாரோ?" கiன்று அவன் மனம் அலை மோதியது. அதன் விளை வ. க. நாம் இப்போது எங்கே போகிறோம்? என்ற கேள்வி அவனிடமிருந்து பிறந்தது. - -