பக்கம்:விடிவெள்ளி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விடிவெள்ளி ஆட்கள் தேடித் திரிகிறார்கள். நல்ல சமயத்துக்குக் கதவு தமக்கு உதவியது' என்று எண்ணி மகிழ்ந்தான் அவன், - நேரம் மெதுவாக ஊர்ந்தது. வேறு குழப்பமோ ஒவிகளோ எழவில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. ஆகவே கதவைத் திறந்துகொண்டு வெளியேறலாம் என்று துணிந்தான் அவன். மேலும் ஒருசில கணம் தயங்கி தின்றான். தாழ்ப்பாளை அகற்றினான். அது டடக்' எனச் சிற்றொலி எழுப்பவும் அவன் நெஞ்சு 'திக்திக்கென அடிக்கத் தொடங்கியது அவசியமற்ற பயம் என மூழ்ங்கியது உள்ளம், அலன் கை கதவைத் மெதுவாத் திறக்க நீண்டது. அதே சமயம் அவன் தோனைப் பற்றி யாரோ அவனை வேக மாகப் பின்னுக்கு இழுக்கவும் அவன் திடுக்கிட்டான். அல் வேளைக்கு பயம் அவனை ஆட்கொண்டது. அவன் உடலில் சிறு நடுக்கம் பரவியது. - - ம் பயம் வேண்டாம். இப்ப வெளிய்ேறினால் நிச்சயம் ஆபத்து எதிர்ப்படும்’ என்று எச்சரித்தது ஒரு பெண் குரல்.

பெண் குரல் என அவன் உணர்வு சொன்னது. 呜諡 ు, தி

'யாரையோ தேடிப்பிடிக்க குதிரை வீரர்கள் தீப்பந்த மும் கையுமாகக் கிளம்பியிருக்கிறார்கள். நீ யாராக இருந்தாலும் சரி. இவ்வேளையில் அவர்கள் முன்னே போய் விழுவது உனக்கு நன்மை பயக்காது என்றாள் 'என்னை காக்க வந்த அன்னை வாழி!' என்றான் அவன், நீ பாண்டி நாட்டக்னோ?" என்று அவள் வினவி គ្រឹះ , ஆம்’ என்று அவன் மெதுவாகச் சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/19&oldid=906030" இலிருந்து மீள்விக்கப்பட்டது