பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

118. இரண்டு வீட்டுக்கு ஒரே உத்தரம்.

119. பட்டு ரோஜா மலர்ந்தது;
        கிட்டப் போனால் சுட்டது.

120. தட்டுப் போல் இருக்கும் - அதில்
        சொட்டுத் தண்ணிர் ஒட்டாது.

121. கழுத்தை வெட்டினால் கண் தெரியும்.

122. வெட்கம் கெட்ட புளிய மரம்
        வெட்ட வெட்ட வளருது.

123. ஒ ஓ மரமே, உயர்ந்த மரமே
        ஒரு பிடி தழைக்கு விதியற்ற மரமே.

124. பார்த்ததோ இரண்டு பேர்,
        எடுத்ததோ பத்துப் பேர்,
        ருசி பார்த்ததோ ஒரே ஒருவன்.

125. சின்னக் குதிரைக்கு நூறு கடிவாளம்.

126. பார்க்கப் பச்சை, பழுத்தால் சிவப்பு.
        பல்லிலே பட்டால் கண்ணிலே நீர்.

127. சாப்பாட்டுக்குக் குறைவில்லை,
        தண்ணிர் பட்டால் மரணம்.

128. வெள்ளைக் குதிரைக்குப் பச்சை வால்.

129. ஒ ஓ அண்ணா, உயர்ந்த அண்ணா,
        தோளிலே என்ன தொண்ணுறு முடிச்சு?

130. ஊசி முனையிலே ஒய்யார சங்கீதம்.

131. முத்துக் கோட்டைக்குள்
        மூன்று பேர் புகுந்தார்கள்.
        புகுந்தவர் வரவில்லை.
        போர் நடக்குது; ரத்தம் சொட்டுது.

132. இருண்டதோர் காட்டில், மிரண்டன. பன்றிகள்.
        பத்துப் பேர் பிடிக்க இரண்டுபேர் குத்தினர்.

133. உழைக்க உழைக்க உடம்பிலே தோன்றும்.