10
134. கண்டதுண்டமாய்க் கரியைத் தின்பேன்.
கண்கள் இல்லாமல் காதம் போவேன்.
தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பேன்.
குரல் இல்லாமல் கூச்சல் போடுவேன்.
135. ஜாடி மேலே குரங்கு.
136. இரண்டு கை உண்டு; எட்டிப் பிடிக்க முடியாது.
நான்கு கால் உண்டு நடந்து செல்ல முடியாது;
முதுகு உண்டு, ஆனால் முகம் கிடையாது.
137. பொரி பொரித்தேன்; பொட்டியில் வைத்தேன்.
விடிந்து பார்த்தேன்; வெறும் பொட்டி இருந்தது.
138. முதுகிலே இருப்பது கூடு - அது மீனாக்குட்டிக்கு வீடு.
139. வெய்யிலில் காய்வேன்; மழையில் நனைவேன்.
அண்டி வந்தவர்க்கு அடைக்கலம் தருவேன்.
140. இத்தனூண்டு தண்ணிக்குள்ளே
சித்திரப் பூ பூத்ததாம்.
141. பெட்டியைத் திறந்தேன் கிருஷ்ணன் பிறந்தான்.
142. அரியலூரு அம்மாமி அதிகப் பிள்ளைக்காரி,
பால் இல்லாமல் பிள்ளை வளர்ப்பதில்
பலே கெட்டிக்காரி.
143. நடலாம்; பிடுங்க முடியாது - அது என்ன?
144. வால் நீண்ட குருவிக்கு
வாய் உண்டு; வயிறில்லை.
145. மூன்று கொம்பு மாடு: ஒரு கொம்பால் குத்துது.
146. பிள்ளை பிறந்தது; பிறந்ததும் எழுந்தது.
எழுந்து நாலு பேரைக் கடித்தது.
147. எங்கள் அப்பா பணத்தை எண்ண முடியாது;
எங்கள் அம்மா புடவையை மடிக்க முடியாது.
148. தவழும்போது ஒரு பெயர்,
விழும்போது வேறு பெயர்,
உருளும்போது இன்னொரு பெயர்.