16
217. அம்மா கொடுத்த தட்டிலே
தண்ணிர் விட்டேன்; நிற்கவில்லை.
218. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை.
219. மரம் ஏறும் மங்காத்தாளுக்கு
முதுகிலே மூன்று சூடு.
220. உருவம் இல்லாத மனிதன்,
உலகமெல்லாம் கற்றுகிறான்.
221. எண்ணெய் வேண்டாத விளக்கு;
எடுப்பார் கை விளக்கு;
கண்ணிர் விட்டு விட்டுக்
கரைந்திடும் விளக்கு.
222. மூட்டை தூக்கி முத்தையன்
நத்தையல்ல;
தண்ணிரில் இருக்கும் தத்தையன்
தவளையல்ல.
223. உண்டுவிட்டு உண்டுவிட்டு உறங்குவான்.
அவன் யார்?
224. ஒருவனைக் கூப்பிட ஊரையே அழைப்பான்.
225. கடித்தால் கடிபடாது; பிடித்தால் பிடிபடாது
226. சுட்டவன் சந்தைக்குப் போகிறான்.
227. பல்லைப் பிடித்து அழுத்தினால்,
பதறிப் பதறி அழுவான்.
228. பாறையின் மேல் கோரை;
கோரைக்குள்ளே குறவன்.
229. வீடில்லா நகரங்கள்;
நீரில்லா சமுத்திரங்கள்.
230. வெள்ளைக் குதிரையும் கறுப்புக் குதிரையும்
ஆற்றுக்குப் போச்சு;
வெள்ளேக் குதிரை வீட்டுக்கு வந்தது;
கறுப்புக் குதிரை ஆற்றோடு போச்சு.