27
363. அந்தரத்தில் பறந்திடுமாம்; பருந்து அல்ல.
அழகான வாலுண்டு; அனுமார் அல்ல.
விந்தையான கட்டுண்டு; மூட்டை அல்ல.
வேந்தருக்கும் அதற்கும் ஒரு நெருக்கம் உண்டு.
364. உப்பை உண்டவன்
உறங்காமல் அலைகிறான்.
365. ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே,
பச்சைப் பாம்பு தொங்குது.
366. மூன்று நிறக் கிளிகளாம் - அவை
கூண்டில் போனால் ஒரே நிறமாம்.
367. நீட்டிக் கொண்டு நடுவே படுக்கும்;
சுருட்டிக் கொண்டு மூலையில் நிற்கும்.
368. அப்பன் சொறியன்;
ஆத்தாள் சடைச்சி;
அண்ணன் முழியன்;
நானோ சக்கரைக்கட்டி.
369. அறுக்க உதவாத கருக்கரிவாள் எது?
370. காலையில் வந்த விருந்தாளி
மாலையில் மறைந்திடுவார்.
371. நாலு காலுண்டு; வீச வாலில்லை.
372. கொல்லையிலே சோறு பொங்கி வைத்தேன்;
காக்கையும் தின்னவில்லை; கழுகும் தின்னவில்லை.
373. ஊசி நுழையாத கிணற்றிலே,
ஒரு படி தண்ணீர்.
374. இத்தனுாண்டு சித்தாளுக்கு,
ஏழு சுற்றுக் கண்டாங்கி.
375. அந்தரமான குகையிலே,
சுந்தரமானவள் ஆடுகிறாள்.
376. ஆடி அசைந்து வர, அடியில் சிந்திவர,
கூடிய பெண்கள் குடுமியை ஆட்டிவர.