3
29. கள்ளனுக்குக் காவல்
காற்றுக்குத் தோழன்.
30. வெள்ளைக் குதிரையும் கறுப்புக் குதிரையும்
மாறி மாறி ஒடும்; பிடிக்க முடியாது.
31. காசியிலிருந்து கல்கத்தாவரை
ஆடாமல் அசையாமல் போகிறது, அது என்ன?
32. மஞ்சள் சட்டை மாப்பிள்ளை
மண மணக்கிRறார் வீட்டிலே.
33. பார்த்தால் கல்தான்;
பல்பட்டால் தண்ணிர்தான்.
34. உள்ளே இருந்தால் ஒடித்திரிவான்;
வெளியில் வந்தால் விரைவில் மடிவான்.
35. அண்டை வீட்டில் குடியிருப்போம்
அக்காள் தங்கை நாங்கள்;
கிட்டகிட்ட இருந்தாலும்
தொட்டுக் கொள்ள மாட்டோம்.
36. முகத்திலே காட்டுவான்;
முதுகிலே காட்டமாட்டான்.
37. ஒரு குருவிக்கு ஒரே கால்; நாலு இறக்கை.
38. முன்னும் பின்னும் போவான் - ஆனால்,
ஒற்றைக் காலில் நிற்பான்.
39. ஒல்லியான மனிதனுக்கு ஒரே காது.
40. முதுகெல்லாம் கூனல்; வயிறெல்லாம் பல்.
41. முள்ளு வேலியும் தாண்டி,
மூங்கில் வேலியும் தாண்டி,
உள்ளே சென்று பார்த்தால்
ஒளிந்திருப்பான் சின்னப்பயல்.
42. கொக்கு நிற்க நிற்க;
குளம் வற்ற வற்ற.
43. ஆலமரம் தூங்க,
அவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் துரங்க,
திருபாற்கடல் தூங்க,
ஒருவன் மட்டும் தூங்கவில்லை.