பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 மு.கருணாநிதி சேர்வராயன் மலையிலும், நீலகிரி, பழனிமலையி லும், ஆந்திராவிலும் அலுமினியத்தை அளித்திடும் திராவிடம், அணுகுண்டு தயாரிக்கும் தோரியத்தை மணலோடு கலந்து மகிழ்ந்தளிக்கும் திராவிடம், தனிக் குடியரசு அமைத்துக்கொள்வது தாம்! தீவு வாழலாமாம். திராவிடம் கூடாதாம் ! தகா லிபியாவின் விடுதலைக் கிளர்ச்சியை ஒத்துக் கொள்வார்கள். டூனிஸியா போரை தட்டிக்கொடுப் பார்கள். ஏன்; டாக்காவிலே நடைபெறும் மொழிக் கிளர்ச்சியைக் கூட ஆதரிப்பார்கள் . tes ஆனால் நம்மைதான் நாக்கில் நரம்பின்றி ஏள னம் செய்வார்கள். புதுவிதப் பிறவிகள் ! பர்மாவிலே கரேனியர் தனியிடம் கோருகின்ற னர். இதோ, வடகிழக்கு எல்லைப்புற மலைவாசிகள் நாகர்கள்,நாகாஸ்தான் கேட்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் கொண்ட இவர்கள் நாகாஸ்தானுக்காக அறப்போர் புரிய ஆயத்தமாகி விட்டார்கள். நாமோ, நம்மவராலேயே அலட்சியம் செய்யப் படுகிறோம். ஆஞ்சநேயர்களின் ஆவதூறுக்கு ஆளா கிறோம். சுக்ரீவர்களின் சொல்லம்பால் படுகிறோம். தாக்கப்