பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 மு.கருணாநிதி வரிசை இத்தகைய விடுதலைக் கிளர்ச்சி வெற்றி காண வீட்டுக்கொரு வீரர் புறப்படவேண்டும். வரிசையாக புறப்படவேண்டும். "தந்தை மாண்டார் கணவன் இறந்தான் தமையன் செத்தான் - இதோ நான் பெற்ற தளிர்! இவனை யனுப்புகிறேன், போர் முனைக்கு," என்ற வீரத்தாயின் குரல் திராவிடத்தின் வீடுகளிலே எதி ரொலிக்க வேண்டும். புதிய புறநானூறு ஒளி செய்ய வேண்டும். விடு தலைக் கிளர்ச்சி, வீணர்களின் கிளர்ச்சியால் வீழ்ந்து விடாது; வீழ்ந்துவிடக் கூடாது! - பல முனைகளிலே கிளர்ச்சி செய்யும் நாம்-பல மான கிளர்ச்சி செய்யும் நாம் பலாத்காரமற்ற கிளர்ச்சி செய்யும் நாம்-நிச்சயம் வெற்றி பெறுவோம். வெற்றி பெற்றுத் தீரவேண்டும். அந்த நம்பிக்கையை நமக்கு வழங்குவது திராவிட முன்னேற்ற கழகம். அந்த அன்புக் கட்டளையை நமக்கு பிறப்பிப் பவர் அறிஞர் அண்ணா!