பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி 62 இந்தக் கேள்வியின் எதிரொலிதான் திராவிட விடுதலைப் படையினரின் ஓவியக் கலைப் புரட்சி. வரலாறுகளை விளக்கும் ஓவியங்கள்-வஞ்சகர் வீழ்ந்ததைக் காட்டும் ஓவியங்கள்-வீர உணர்ச்சி யைத் தூண்டும் ஓவியங்கள் - என்றிப்படி வளர்ந் திடுகிறது ஓவியக் கலைப் புரட்சி, 1 பழைய சித்திரங்கள் பலவற்றை அழித்துவிட்டு புது சித்திரம் தீட்டும் இரட்டிப்பு வேலை ஏற்பட்டா லுங்கூட, இந்த வேலையிலும் வெற்றியின் தூதுவ ராகி விட்டனர் விடுதலைக் கிளர்ச்சியினர். குழந்தை தாலாட்டிலிருந்து, வளர்ந்து விட்ட வனை வட்டமிடும் சூழ்நிலைகள் எல்லாவற்றிலும் விடு தலை யுணர்வை வீழ்த்திடும் மருந்துகள் கலக்கப் பட்டே யிருந்தன. அடிபீடத்திலிருந்து புரட்சி நடத்தி - பக்குவப் படுத்திடும் பணி பெரியதுதான். ஆனாலும் விடுதலை இயக்கம் சோர்ந்துவிடவில்லை. விடுதலை தாகத்தை மறைத்திட மொழியை அழிக்கும் முயற்சி நடைபெற்றது. நடைபெறுகிறது. உயிர் சிந்தி மொழி காத்து, மொழியையும் ஒரு படைக்கலமாக்கி வீறுகொண்டெழுகின்றனர் விடு தலைச் சேனையினர்.