பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலைமையுரை
தமிழகப் பொதுப்பணி அமைச்சர்,
மாண்புமிகு மு. கருணாநிதி அவர்கள்


இமிழ்கடல் வேலித் தமிழகம் ஈன்ற
என்னுயிர் அண்ணன் அன்னையர் தந்தையர்
பொன்னேரிச் சோதரர் புகழ்மிகு பாவலர்
கண்மணித் தமிழின் காவலர் யாவரும்
இற்றைத் திருநாள் ஏற்பீர், வணக்கம்.

ஆகா ...........
சேரர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே ?
வீரர் பாண்டியர் அரசேன் கவிழ்ந்தது ?
சோழர் உலவிய சோர்விலா நாட்டில்
கோழைக் கொள்கை தந்த தெவ்விதம்? -
வெடித்தன வினாக்கள் வெதும்பிய மனத்தில்
குடித்திடுவோம் உயிர் கொடுத்திடுக நாட்டை
விடுதலை வேண்டாம் எனும் உபதேசம்
நரிகளிள் ஊளை.

நாட்டு வெற்றிப் பிடித்த காளைகளே
கிலிபிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்
புவிவாழ்வின் உச்சியிலே புதுமைதனைப்
[பொறித்திடுவோம்
என்று சிலிர்த்துப் பொங்கி எழுத்த
தமிழகம் தந்த விடுதலை மறவர்
கமழ்மணப் பாவில் மீண்டும் பிறந்திட
வானொலி நிலையம் வழங்கிய அழைப்பால்
வந்துளர் தாங்கள், தலைவர் நானும்