இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கட்டபொம்மன்
9
நடைபோட்டுத் தலைநிமிர்ந்து நிற்போ மல்லால்,
- நயவஞ்சக் காரருக்கெம் பாஞ்சை மண்ணின்
உடைமரத்து நிழல்தானும் ஒதுங்கத் தாரோம்;
- உயிர்கொடுத்துப் புகழ்காப்போம்; கப்பம் கட்டோம்!”
இவ்வுரை கேட்டதும் கும்பினி யான்இனி
- ஏதும் வழியிலே என்றுணர்ந்தே
செவ்வி மிகுந்திடும் பாஞ்சை யதிடனைச்
- சிறைபி டிக்கவும் துணிந்து வீட்டான்.
கும்பினிப் பட்டாளம் சூழ்ந்துவரப் புலிக்
- குகைக்குள் சிக்கிய கம்பளத்தான்
தம்பி துணையொடும் வானின் பலத்தொடும்
- தப்பித்து நாடு திரும்பி வந்தான்.
நாடு திரும்பிய கட்டபொம்மன் கோட்டை
- நாலு புறமும் பலப்படுத்தித்
தேடிவரும் பகை யோடு பொருதிடும்
- தேதியை நோக்கிக் காத்திருந்தான்.
ஆண்பிள்ளை என்றுபி றந்தவர் யாவரும்
- ஆயுதந் தாங்கத் துடிதுடிக்க,
சாண்பிள்ளை யாயினும் சல்லடம், கட்டியோர்
- சன்னதங் கண்டு குதிகுதிக்க
தொண்டு கிழவரும் தோள் புடைக்க, அவர்
- தொங்கிய மீசை கறுகறுக்க ,
பன்டைய வாலிபம் மீண்டது போலவர்
- பாலாக் கம்பினைத் தான்சுழற்ற,