இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கட்டபொம்மன்
13
மட்டில்லாப் புகழ்படைத்த வீரன் நந்தம்
- வரலாற்றில் ஏற்றிவைக்கும் சுடரே, தம்மைச்
சுட்டெரித்துச் சுடுசாம்பல் ஆக்கும் என்னும்
- சூட்சுமத்தை மட்டுமவன் உணர்ந்தா னில்லை!
ஏற்றிவைத்த அச்சுடரே பரத நாட்டின்
- இதயங்கள் எல்லாம்புகுந்து, எழுச்சிக் காலக்
காற்றுவர நிமிர்ந்தெழுந்து, வடவைத் தீயாய்க்
- கனன்றெழுந்து, புடைபுடைத்துக் கனன்று சீறி
வேற்றுவர் தம் ஆட்சியினை வெட்டி வீழ்த்தி
- விடுதலையைத் தந்ததன்றோ? என்றே கூறி
எற்றிருந்த பணிமுடிப்பேன்! அவனை எண்ணி
- இருகையும் கூப்புகின்றேன்! விடையும் கொண்டேன்