பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

விடுதலை வீரர்கள் ஐவர்

கத்திமுத்த மிடக்காத் திருந்தவேளை யென்று

ஒத்திகை யாட்டத்தை ஒக்கலில் முடித்துடன்

மரவியல் களங்கண்டான் மனவயல் பிளவுண்டு

சிறுவயல் தீ நாக்கின் சிறைவால் ஆனதைக்

கண்களால் கண்டன் காணாது கண்டவனோ

புண்ணாக்கி நெஞ்சைப் புரையோடும் புண்ணாக்கித்

தொண்டை மானின் தொண்டை எண்ணிச்

சண்டைக் காடானதென் பாண்டிமண் டலத்தைக்

கண்ணீரால் அவித்துக் கைகளில்முறுக் கேற்றிக்

கொண்டிருந்தான் எட்டப்பன் கூலிகளை நினைத்துக்

காளையார் கோயிலுக்குள் காளையவன் பறந்து

வானைப் பாய்ச்சியங்கு ஆளை மாய்த்திட்டான்

உடையண்ணத் தேவரின் உடைமாற்றி விட்டங்குப்

படைகொண்ட வெள்ளையரோ பணத்தாசைக் காட்டிய

மேலூரில் மருது வாளால் சந்தித்து   [தை

மேலூர்க்கே அனுப்பி வேடிக்கை காட்டினான்

வளரித்தடி கொண்டுவளைத்த போதுஉயிர் மீண்ட

கிளர்ச்சித் தீயனார் களம்போன மங்கலம்

படைகொண்டான் சங்கரப்பதிப் பாடி வீட்டை

இடைவந்த சாதி ஈனர்கள் கும்பினிக்குக்

காட்டிக் கொடுத்திருந்த கள்ளத் தனம்கண்டு

ஈட்டியால் சந்தித்தார் இருவரும் ஆனால்

வெள்ளை மருதுவோ வெள்ளையன் குண்டுக்கு

உள்ளம் கொடுத்து உடல்சாயும் நேரம்

கட்டபொம்மன் பின்னவனும் கட்டிவைத்த வனப்பைக

கொட்டி வைத்திருக்கும் குமரப்பன் சின்னவனும்

கல்லும் மண்ணும் கண்டிரங்கக் கலங்கிச்

சொல்லும் கண்ணீரின் சோகத் திரைவிளிம்பில்

சார்த்திக் கொண்டு சாமகானம் பாடுகையில்