பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

விடுதலை வீரர்கள் ஐவர்

ஷெல்லியின் பாடல்களில் - தம்
சிந்தை பறிகொடுத்தார் - பிற
நல்ல இலக்கியங்கள் - அவர்
நாளும் பயின்று வந்தார்.
அறுசீர் விருத்தம்
களித்துவந்த கள்ளுக்கும்
காதலுக்கும் விருந்துக்கும்
மக்கள் வாழ்வை
அழித்துவந்த கொடுமையினால்
குத்துண்ட புலிபோல
ருசிய மக்கள்
விழித்தெழுந்து பெரும்புரட்சி
மேவியதால் ஜார்மன்னன்
விரிந்த மார்பில்
குளித்துவந்த குண்டுக்குக்
குன்றேறிப் பாரதியார்
வாழ்த்து ரைத்தார்.
எண்சீர் விருத்தம்
கட்டாரி ஓர்புறமும் காத லித்த
காரிகையாள் மறுபுறமும் அணைத்தி ருக்கப்
பட்டாளம் பின் தொடரச் சுதந்திர ப்போர்ப்
பறையடித்த கரிபால்டி மாஜி னிக்கும்
இட்டாலி நாட்டினிலே கொதித்தெ ழுந்த
இளையடடை வீரர்க்கும் புரட்சிப் பாட்டால்
கட்டியங்கள் கூறிநின்றார், அப்பு ரட்சி
கட்டாய மிந்நாட்டில் தோன்று மென்றார்.