இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரதி
27
- உள்ளத்திலே புரட்சி - அவரை
- உந்திக் கிளப்பியதால்
- கள்ளத்தனம் வெறுத்தார் - பழங்
- கட்டுக்க ளையுதிர்த்தார்.
- சாதி சமயங்களைப் - பேசிக்
- சண்டைகள் செய்பவரை
- மோதி மிதிப்ப னென்றார் - அவர்
- முகத்தில் உமிழ்வ னென்றார்.
- உள்ளத்திலே புரட்சி - அவரை
- மன்னரைச் செல்வரைப் பாடி வயிற்றை
- வளர்ப்பதும் வாழ்வாமோ - ஏழை
- கண்ணீரைப் பாடிக் கவலைகள் தீர்வது
- கவிதை யென்றுரைத்தார்.
- மன்னரைச் செல்வரைப் பாடி வயிற்றை
- சின்னத்தனம் மிக்க மன்னவர் நட்பைச்
- சீயென் றுமிழ்ந்துவிட்டே - அவர்
- சென்னை நகர்வந்து பத்திரி கைத்தொழில்
- செய்து பிழைத்து வந்தார்.
- சின்னத்தனம் மிக்க மன்னவர் நட்பைச்
- அச்சம் விடுத்தா ரயலவர் ஆட்சியைத்
- துச்சமாய் மதித்தார் தூள்தூ ளென்றார்
- மீசையை முறுக்கி மேலே யேற்றினார்
- சிங்க ஏற்றைச் சிந்தையில் நிறுத்தினார்
- நெஞ்சை நிமிர்த்து நேரே பார்த்தார்