பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
௫. வ. உ. சிதம்பரனார்
[புலவர் இளஞ்செழியன்]

முன்னுரை:

சூடு பறக்கும் சுவைத்தமிழில், நாட்டுமக்கள்
கேடு பறக்க, கெட்ட குணம்பறக்க
ஆடும் அழகுமயில் ஆட்டத்தைப் போலித்த
நாடு சிறக்க நலம் பிறக்கப் பேசுகின்ற
எங்கள் கலைஞ! எழிலவாய்ந்த பெட்டகமே!
எங்கள் கவியரங்கிற் கேற்ற தலைவரென
இங்கு எழுந்தவரே! இங்கிந்த நாட்டவர்கள்
சிங்கமெனக் கொண்டாடிச் சிரம்தாழ்த்தும் மன்னவரே!
தங்கத் தமிழகத்தைத் தாங்கி நடத்தவந்த
தங்களுக்கு என்றன் தலைவணக்கம் கூறுகின்றேன்;
பாட்டிசைக்க வந்தோர், பலபேர்க்கும் அவ்வாறே
கூட்டியென் நன்றிதனைக் கூறி மகிழ்கின்றேன்;

புவியரங்கில் முதற்காலம் தோன்றுகையில் தோன்றிப்
புகழ்படைத்த தமிழ்மொழியில் இவையெனககுத் தோன்ற,
கவியரங்கில் நான்கலந்து கொள்வதற்கு வந்தேன்.
கப்பலோட்டி யான் புகழைச் சொல்வதற்கு வந்தேன்;
செவியரங்கில் நீங்களெல்லாம், அந்தவீர தீரச்
சிதம்பரனார் சரித்திரத்தைக் கேட்டு உங்கள் நெஞ்சில்
சுவைபொங்க, தென்னாட்டு வீரமது பொங்க,
செந்தமிழில் ஆசைவைக்கக் கேட்டுக்கொள் கின்றேன்;

போரையே எந்தப் பொழுதும் விரும்பியிந்தப்
பாரை வியக்கவைத்த பாண்டியனும் வெள்ளிப்
பனிமலைக்குச் சென்றதனைப் பணியவைத்து வந்தவனும்