பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

விடுதலை வீரர்கள் ஐவர்

தணித்த புகழில் தழைத்தசோ ணாட்டவனும்
காகானத் தகும்பெரிய களிற்றைப்போல் வந்தவர் தான்
பூணத் தகும் வீரப் புதுமையினைத் தந்தவர் தான்
வ.உ.சி. நாட்டு வரலாற்றில் நான் கண்டேன்;
சாவூருக்கு அஞ்சிச் சமரென்றால் அஞ்சுகின்ற
பேடியூர் தன்னில் பிறந்த மனிதரல்ல;
நாடு மணக்கவரும் நல்வீரம் பூக்கவரும்
கட்டபொம்மன் என்பான் அக் காலத்தில் தோன்றிவந்த
ஓட்டப் பிடாரமெனும் ஊரில் அவர் பிறந்தார்!

அந்நியர்கள் இந்நாட்டில் ஆதிக்கக்
கொடியூன்ற அதனை இங்கே
வெந்தணலால் எரிப்பதற்கும் விடுதலைக்கு
உழைப்பதற்கும் பிறந்து வந்தார்!
பன்னீரில் குளிப்பதற்கும் பழச்சாற்றில்
தோய்வதற்கும் பஞ்சில் துஞ்சிக்
கன்னியரை அணைப்பதற்கும் காமத்தில்
புரள்வதற்கும் நினைத்தி டாமல்
கண்ணீரை இழப்பதற்கும் கவலைகளை
ஏற்பதற்கும் பிறந்து வந்தார்!
விண்ணுலகம் மண்ணுலகம் இன்னபிற
உலகமெலாம் எண்ணி எண்ணித்
தென்னாட்டுத் திலகரெனத் திலகமெனக்
கொண்டாடப் பிறந்து வந்தார்!
மண்ணிருக்கும் காலம்வரை மறையாமல்
இங்கிருக்கப் பிறந்து வந்தார்!

வேறு


செல்வத்தில் அவர் பிறந்தார்; அவரை வீட்டில்
செல்வமென வளர்த்தார்கள்; வளர்ந்தார்; பின்னர்