பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

விடுதலை வீரர்கள் ஐவர்

காற்றோட்டம் இல்லாத பழைய வீடு,
கடுகளவும் வெளிச்சமில்லா இருட்டு வீட்டில்
ஊற்றுணர்ச்சி அற்றிருந்த மக்கள் தம்மை
உணர்ச்சியினால், எழுச்சியினால் எழும்ப வைத்தார்;

“எழுச்சிமிக்க நாட்டோரே! பழைய நாளில்
ஈட்டிவந்த கீர்த்தியெலாம் உங்கள் கீர்த்தி!
முழுச்சினத்தைக் கொண்டவர்கள் நமது முன்கோர்!
முடியிழந்து ஒரு நாளும் வாழ்ந்த தில்லை!
செழிப்புமிக்க நாட்டினிலே நாம்பி றந்து
சிறுமைகொண்ட பேர்களிடம் ஒடுங்க லாமா?
விழிப்புமிகுந் திடுங்களின்றே! இந்த நாட்டின்
வீரத்தைக் காட்டுதற்கு எழுந்து வாரீர்!

தாய் நாட்டுப் பொருளையன்றி வேறு நாட்டார்
தருகின்ற பொருளையினி வாங்கி டாதீர்!
பாய்கின்ற நதிகளிங்கு நீரைப் பாய்ச்சப்
பலபொருளும் இந்நாட்டில் விளைவதுண்டு!
ஆய்கின்ற மதிவேண்டும்; இந்த நாட்டின்
அவமானத் தைத்துடைக்கும் எண்ணம் வேண்டும்?
போய் வாங்கிடுவீர் நமதுபொருளை! நாட்டுப்
பொருள்வளப்பீர்! அருள்வளப்பீர்! என்று சொன்னா.

தொழில்வளர்க்கும் சங்கத்தை வைத்தார்; நாட்டின்
தொழில் வளர்த்தார், எழில்வளர்த்தார், கப்பல்ஓட்டும்
தொழிலின்றி தென்னாடு செழிக்கா தென்னும்
சித்தையினை அவர்பெற்றார், பலரைச் சேர்த்துக்
குழுவமைத்தார்; கூட்டுமுறை தன்னில், ஆளும்
கூட்டத்தார் நடுநடுங்க, கிடுகிடுக்க
முழுத்திறமை கொண்டவராய் கப்பல் தன்னை
முழங்குகின்ற கடலில் விட்டார், வெற்றிபெற்றார்;